TCS, Wipro, Infosys, HCL நிறுவனங்களில் 60,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, HCL மற்றும் இன்போசிஸ் ஆகியவை இந்த நிதியாண்டில் சுமார் 60,000 பெண் ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது.
IT வேலைவாய்ப்பு:
கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் இந்தியாவில் இயங்கி வரும் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதால் இவற்றை சரி செய்ய புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் கீழ் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, HCL மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட IT நிறுவனங்கள் சுமார் 60 ஆயிரம் பெண் ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு!
TCS நிறுவனத்தை பொருத்தளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்ததைப் போல 38 முதல் 45 சதவிகிதம் பெண் ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை தர உள்ளது. தற்போது, இந்நிறுவனம் 1.85 லட்சம் பெண் ஊழியர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் நாட்களில் 15,000 முதல் 18,000 ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. HCL நிறுவனம் 22,000 புதிய ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாகவும், அதில் சுமார் 60% பேர் பெண்கள் என தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்போசிஸ் நிறுவனம் 45% பெண் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் கிட்டத்தட்ட 35,000 கல்லூரிகளில் கேம்பஸ் வேலைவாய்ப்பு மூலம் வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும், இதில் 50% பேர் பெண்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிறுவனங்களில் டிஜிட்டல் திறமைக்கான தேவை உயர்ந்து வருவதால், தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது, பணியமர்த்தல், மற்றும் திறன் ஆகியவற்றில் புதிய பணியாளர்களை அமர்த்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.