கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு!
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடுவதாக வெளியான தகவலின் பேரில் கோவில்கள் மூடப்பட்ட நிலையில், இன்று பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் பயனாக தினசரி பாதிப்பு குறைந்ததின் அடிப்படையில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. மீண்டும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வருவதனால் பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 3 நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சத்துணவு வழங்க அங்கன்வாடி மையங்கள் திறப்பு – நீதிமன்றத்தில் தகவல்!
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா மற்றும் அம்மன் கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் என பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடுவதனால் நோய் பரவும் விகிதம் அதிகமாகும் என்பதை கருத்தில்கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் 3 நாட்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் பெரும்பான்மையான கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்களில் கோவில் வளாகம் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் கோவில்களுக்கு பக்தர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அதை மூடுவதற்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.