தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு? அரசுக்கு வலியுறுத்தல்!

0
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு? அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு? அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு? அரசுக்கு வலியுறுத்தல்!

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் மின்வாரிய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மின்வாரிய ஊழியர்கள்

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வருகிற 28ம் தேதி சென்னையில் பேரணி நடத்த இருப்பதாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக அதிகாரிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு – எப்போது அறிவிப்பு வெளியாகும்?

இதில் அதிகாரிகள் தெரிவித்தாவது, மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வும், 25 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தினார். ஆனால் அதிகாரிகள் எழுதி தர மறுத்தனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனால் மின்வாரிய ஊழியர்களால் திட்டமிட்டபடி பேரணி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!