நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்படும் ரேஷன் அட்டைகள் – மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
நாடு முழுவதும் உள்ள 19.79 கோடி குடும்ப அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிஜிட்டல் ரேஷன் அட்டைகள்
இந்தியாவில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் எந்த ரேஷன் கடைகளிலும் கை ரேகை மூலமாக ரேஷன் பொருள்கள் வாங்கி கொள்ளலாம். நாட்டில் தற்போது 19.79 கோடி ரேஷன் அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுந்தாற் போல அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய இணைய முகப்பு வசதியை உருவாக்கியுள்ளன. இந்த திட்டத்தில் 5.33 லட்சம் நியாயவிலை கடைகளில் விற்பனைக்கான மின்னணு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு – எப்போது அறிவிப்பு வெளியாகும்?
மேலும் இந்த திட்டம் மூலம் மின்னணு முறையிலான கைரேகைப் பதிவு, பொருட்கள் வாங்கியவுடன் நுகர்வோரின் செல்போனுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் 95 சதவிகிதம் மின்னணு கைரேகை பதிவை மூலம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டமும், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அது மட்டுமில்லாமல் பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானியத் திட்டம், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம், ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டைத் திட்டம் போன்ற திட்டம் மூலம் சம்மந்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும்படி மத்திய உணவு அமைச்சகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download