தமிழகத்தில் 53 மருத்துவர்களை பலி கொண்ட கொரோனா 2வது அலை – ஷாக் ரிப்போர்ட்!
கொரோனா 2வது அலையில் மட்டும் தமிழகத்தில் 53 மருத்துவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து உள்ளதாக ஷாக் ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது.
மருத்துவர்கள் பலி:
2019ம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்றானது முதல் மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதனை தொடர்ந்து இறப்பு விகிதமும் உயர்ந்தது.
புதுவை பல்கலைக்கழக (CAT) நுழைவுத்தேர்வு – ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
நாள் ஒன்றுக்கு 1000கும் மேல் பலி எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களின் இறப்பும் இதில் அடங்கும். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை 53 மருத்துவர்கள் பலியானதாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட புள்ளி விவரம் கூறுகிறது. தமிழகத்தில் முதல் அலையின் போது 67 மருத்துவர்கள் பலியாகினர். அதனை தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கொரோனா அலையின் காரணமாக 120 மருத்துவர்கள் பலியாகியிருப்பது தெரிய வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த புள்ளி விவரங்கள் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு என கூறப்படுகிறது. இந்திய மருத்துவச் சங்கம், கொரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கியது. தமிழக மருத்துவ சங்கமும் கொரோனாவால் உயிரிழந்த தமிழக மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கியது என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் டி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.