தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்ந்து ரொக்கப் பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ரொக்கப்பணம்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.505 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்களை அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.1,17 ,70,000 ரூபாயை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
நேற்று சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. டோக்கனில் பரிசு பெறும் நபரின் பெயர், நாள் மற்றும் நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகை குறித்து எவ்வித அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பொங்கல் பரிசுத் தொகையாக 5 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி.16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை!
அண்மையில் பொங்கல் பரிசுத் தொகை குறித்து உணவு வழங்கல் துறை அமைச்சரிடம் கேட்ட போது, ரொக்கப்பணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை ரொக்க பணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் மத்திய அரசிடம் கூடுதலாக நிதியுதவி பெற்று தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.