தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!

0
தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. இதனால் நாளை முதல் கடைபிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் அதிகரித்து வந்த காரணத்தினால் கடந்த மே 10ம் தேதி முதல் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஊரடங்கு காலத்திலும் அதிக பாதிப்புகள் தமிழகத்தில் பதிவாகி வந்த நிலையில், தமிழக அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவினால் தமிழகத்தில் மெல்ல கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது. இதனால் அரசு படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வந்தது.

தமிழகத்தில் ஜனவரி.16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை!

ஊரடங்கு தளர்வுகளில் முதல் கட்டமாக அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இறுதியாக சுற்றுலா போன்றவற்றிற்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பண்டிகை காலங்களில் நோய் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இறுதியாக டிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை அரசு ஆணையாக வெளியிட்டது. அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

ஆதார் கார்டில் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கடற்கரைகளில் மக்கள் கூடுவதையும் இதற்கான நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கட்டுப்பாடுகள் முடியவிருப்பதால் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 1ம் தேதி முதலான கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பின்னர் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!