தமிழகத்தில் ஜனவரி.16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் ஜனவரி.16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ஜனவரி.16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ஜனவரி.16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

பள்ளி விடுமுறை

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் தொற்று புதிய பாதிப்புகளை உருவாக்கி வரும் சூழ்நிலையில், மாநிலங்கள் தோறும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா, கேரளா, டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போல தமிழகத்திலும் தற்போது இரட்டை இலக்கங்களாக ஒமிக்ரான் பரவல் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.31) முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆதார் கார்டில் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ‘தமிழகத்தில் தற்போது பரவி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று மாணவர்களை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பள்ளி, கல்லூரிகளில் நிலையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றாலும் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக தான் காணப்படுகிறது. அதே போல தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

தமிழகத்தில் அரசு விழாக்கள் நடத்த தடை, கூடுதல் கட்டுப்பாடுகள் – முக்கிய கோரிக்கை!

இப்போது புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் வருவதால் ஜனவரி 16ம் தேதி வரையும் இந்த விடுமுறையை நீட்டிக்க வேண்டும். ஏனென்றால் பண்டிகை காலங்களில் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல நேரிடுவதால் கொரோனா தொற்று அதிகளவு பரவுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மற்றும் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகை முடியும் வரையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!