தமிழக மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு – புதிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்திற்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு:
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்த காலத்தில் மருத்துவத்துக்கு படித்து வேலை இல்லாமல் இருந்த நிறைய மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வேலைகள் கொடுக்க பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல்முறையில் மருத்துவ மாணவர்களை தேர்ந்தெடுத்து சுகாதாரத் துறையில் ஒப்பந்த மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் மருத்துவ துறையில் படிக்க எழுதும் தேர்வான நீட் தேர்வை மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
கோடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் உயர்வு!
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசுக்கு 50 சதவிதங்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு தற்காலிகமாக வழங்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கலந்தாய்வு நடத்தி கொள்ளவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவாக களம் இறங்கும் புதிய நடிகை – அதிர்ச்சி தகவல் வெளியீடு!
இந்த நிலையில் தற்போது இது குறித்து உத்தரவு வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவு, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், உத்தரவு செல்லும் என கூறியதுடன் கவுன்சிலிங் நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 50 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.