தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அரசு புதிய உத்தரவு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - அரசு புதிய உத்தரவு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - அரசு புதிய உத்தரவு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அரசு புதிய உத்தரவு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கி இருக்கும் ஏழை எளிய மக்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தகுதியானவர்களின் இறுதி பட்டியலை தயார் செய்ய குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை சார்பில் 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்த வங்கி மூலமாக குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி 110 விதியின் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் படி ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும், சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது.

தமிழக Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

இது குறித்து தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல மோசடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி சலுகையை பெற தகுதி மற்றும் தகுதியற்ற நேர்வுகள் குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டன. வெளி மாவட்டங்களில் உள்ள வங்கி பணியாளர், நகை பரிசோதகர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது அரசு சார்பில் உத்தரவு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி உள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்ய துணை பதிவாளர் தலைமையில் ஒவ்வொரு சரகத்திற்கும் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழுதான் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி உள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான 31 சதவீத அகவிலைப்படி உயர்வு எப்போது? அரசுக்கு கோரிக்கை!

அதில் ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு வழங்கப்பட்ட 40 கிராமிற்கு மேற்பட்ட அனைத்து பொது நகைக்கடன்கள், ஒரே ரேஷன் அட்டை எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு வழங்கப்பட்ட 40 கிராமிற்கு மேற்பட்ட அனைத்து பொது நகைக்கடன்கள் பெற்று நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியில்லாதவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகுதி பெற்றோர் மற்றும் தகுதி பெறாதோரின் பட்டியலை அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!