தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான 31 சதவீத அகவிலைப்படி உயர்வு எப்போது? அரசுக்கு கோரிக்கை!
கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக நியாய விலை கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் அகவிலைப்படியினை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் அரசினை வலியுறுத்தியுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு துறைகளின் கீழ் செயல்பட்டு வருகிறது, நியாய விலை கடைகள் எனப்படும், ரேஷன் கடைகள். பொது மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மளிகை பொருட்கள் மற்றும் அரசி ஆகியவற்றை ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியினை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு பணியாளர்கள் சங்க தலைவர் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். அதன்படி, ரேஷன் கடை பணியாளர்களுக்கு முன்னதாக 14 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மரணம் – திரைத்துறையினர் இரங்கல்!
பின்னர், தமிழக அரசு அனைத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவித்து இருந்தது. அதனை அமல்படுத்த அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், ரேஷன் கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 14 சதவீத அகவிலைப்படியே இன்னும் வழங்கப்படவில்லை. அதே போல் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 31 சதவீத அகவிலைப்படியும் வழங்கப்பவில்லை. இதனால் ஊழியர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் முழு ஊரடங்கு? அரசின் அதிரடி முடிவு!
இது குறித்து தமிழக பணியாளர்கள் சங்க தலைவர் கு.சுப்பிரமணியன் கூறியதாவது, அகவிலைப்படி குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்ட போது அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் தான் வழங்க முடியும் என்று கூறி வருகின்றனர். அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதே போல தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அதனை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.