தமிழக கூட்டுறவு வங்கிளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய உத்தரவு!
தமிழகம் முழுவதும் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி குறித்து அனைத்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் கூறப்பட்டிருந்தது. திமுக தேர்தல் அறிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்? கட்டுக்கடங்காத காற்று மாசுபாடு! உச்ச நீதிமன்றம் அதிரடி!
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் நடைபெற்ற பயிர்க்கடனில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அவ்வாறான தவறுகள் நகைக்கடன் தள்ளுபடியிலும் நடைபெற்றிருப்பதாககூறினார். அதனை தொடர்ந்து தற்போது தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த மார்ச் 31 ஆம் தேதியில் நிலுவையில் இருந்தபோது நகைக்கடன் மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து ஆய்வு நடைபெறும் நாள் வரை நிலுவையில் இருந்தபோது நகைகளை வெளிமாவட்ட அலுவலர்களை கொண்ட குழு அமைத்து 100% ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வு பணி விவரங்கள் அனைத்தையும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த மாதம் 1 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள் வரை நிலுவையில் இருந்த 6,000 கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்று வாரங்களுக்கு பகுதிநேர ஊரடங்கு அமல், அதிகரிக்கும் கொரோனா தொற்று – பிரதமர் உத்தரவு!
கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைகடன் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. எனவே தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த மாதம் ஒன்றாம் தேதி வரை வரும் வட்டியையும் அரசு ஏற்றுக்கொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் தள்ளுபடி தொகையை வழங்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதம் ஒன்றாம் தேதி வரையிலான அசல் தொகைக்கான வட்டியை கணக்கிட ஏதுவாக எந்த தொகையையும் திருப்பி செலுத்தப்படாத கடனுக்கான வட்டியையும், பகுதியாக தொகை செலுத்தப்பட்டு இருந்தால் அந்தத் தொகையை நீக்கிவிட்டு மீதமுள்ள கடனுக்கான வட்டியை கணக்கிட்டு பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.