தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வுப்பணியினை விரைந்து முடிக்க அறிவுரை!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி வழங்குவது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணியை விரைந்து முடிக்குமாறு மண்டல இணைப் பதிவாளர்களை கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு காரணமாக நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகள் அரசால் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளது மற்றும் போலி நகைகள் மூலம் நகைக்கடன் பெற்றுள்ளது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
ஆன்லைனில் ஆட்டோ புக் செய்பவர்கள் கவனத்திற்கு – இனி 5% GST! மத்திய அரசு ஷாக் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து அனைத்து கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் கடந்த மார்ச் வரை நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் மற்றும் ஏப்ரல் வரை வழங்கப்பட்டுள்ள நகைக்கடன் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டது. அதற்காக வேறு மாவட்ட அதிகாரிகள் அடங்கிய தனிக்குழுவை அமைத்து 100% முழுமையாக ஆய்வு மேற்கொள்ளுமாறு கடந்த செப்டம்பர் மாதம் மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கீழ் பெரும்பாலான மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post Office இல் சிறந்த மூன்று சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!
அதாவது நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியல் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் சில பகுதிகளில் முழுமையாக ஆய்வுப்பணி இதுவரை முடிக்கப்படவில்லை. இந்நிலையில் விரைந்து ஆய்வுப்பணிகளை முடிக்குமாறு கூட்டுறவுத்துறை, மண்டல இணைப் பதிவாளர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது குறித்த அறிக்கையை வரும் 30ம் தேதிக்குள் கூட்டுறவு சங்க பதிவாளரிடம் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.