Post Office இல் சிறந்த மூன்று சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!
மத்திய அரசு பெண் குழந்தைகள், மூத்த குடிமக்கள், நடுத்தரவர்க்க மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்ற வகையில் அஞ்சல் துறையின் கீழ் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் சிறந்த சேமிப்பு திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அஞ்சல் சேமிப்பு:
மத்திய அரசு பெண் குழந்தைகள், மூத்த குடிமக்கள், நடுத்தரவர்க்க மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்ற வகையில் அஞ்சல் துறையின் கீழ் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. பொதுவாக சேமிப்பு திட்டங்கள் என்பது வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அஞ்சல் துறை என அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு பணத்திற்கான பாதுக்காப்பு அளிக்கும் வகையில் நம்பகத்தன்மை உடையது அஞ்சல் துறை என்றே கூறலாம்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.144 குறைவு – இன்றைய நிலவரம்!
அந்தவகையில் அஞ்சல் துறையின் கீழ் கிட்டத்தட்ட 9 சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டங்களில் நீண்ட கால அடிப்படையில் நல்ல வருவாய் தரும் சிறந்த திட்டமாக கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் இருந்து வருகிறது.
- கிசான் விகாஸ் பத்திரத் திட்டம்: கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபர் அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பெயரில் வயது வந்தவர்கள் இந்த கிசான் விகாஸ் பத்திரம் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்த திட்டத்தில் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு உயர்த்துகிறது.
- ரெக்குரிங் திட்டம்: நடுத்தர மக்கள் சேமிப்பு தொடங்கும் வகையில் மாதத்திற்கு ரூ.100 வைப்பு நிதி செலுத்தும் திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டித்தொகை கணக்கிடப்படும். திட்டத்தின் 5 ஆண்டு கால மெச்சூரிட்டி முடிவடைந்தால் அதனை நீட்டித்துக்கொள்ளலாம்.
- மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு எதிர்காலத்தில் வருமானம் தரும் வகையில் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரும்பாலான மூத்த குடிமக்களின் தேர்வாக நிலையான வாய்ப்பு நிதி திட்டம் இருந்து வருகிறது.
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! டிச.4 கடைசி நாள்!
- ஏனெனில் இந்த திட்டத்தில் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அளவில் நல்ல வட்டி விகிதம் கிடைக்கிறது. காலாண்டு அடிப்படையில் வழக்கமான வட்டி வருமானத்தைபெறுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 60 உடைய முதலீட்டாளர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் ரூ .15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.