ஆன்லைனில் ஆட்டோ புக் செய்பவர்கள் கவனத்திற்கு – இனி 5% GST! மத்திய அரசு ஷாக் அறிவிப்பு!
இந்தியாவில் இணையதளத்தில் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைகளுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி 2022 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி:
இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பரவி வரும் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் உற்பத்தி, விற்பனை போன்ற அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவை ஈடுகட்ட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சரக்கு மற்றும் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள், மருந்து பொருட்கள் மட்டும் தடுப்பூசி போன்றவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வந்தது.
Post Office இல் சிறந்த மூன்று சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!
இது குறித்து மத்திய நிதித்துறை, மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது. அதனை தொடர்ந்து பொருளாதார பின்னடைவில் இருந்து மீண்டு வர முடியாத நிலையில் ஜிஎஸ்டி வரி பெரும் சுமையாக உள்ளது என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஆன்லைன் ஆட்டோ சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய போக்குவரத்து தேவைகளுள் ஒன்றாக ஆட்டோ சேவை உள்ளது. மக்கள் எளிதாகவும், காலதாமதமின்றியும் ஓரிடத்திற்கு செல்ல பெரும்பாலும் ஆட்டோவையே தேர்ந்தெடுக்கின்றனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.144 குறைவு – இன்றைய நிலவரம்!
தற்போது OLA , UBER மற்றும் பிற செயலிகள் மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். இந்த ஆன்லைன் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி கட்டணம் விதித்துள்ளது. இதனால் இனி ஆன்லைன் ஆட்டோ கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் ஆட்டோ புக்கிங் சேவைக்கு இந்த ஜிஎஸ்டி பெரும் பாதிப்பையும் உண்டாக்கக்கூடும். இந்த ஆன்லைன் ஆட்டோ சேவைக்கான 5% ஜிஎஸ்டி வரி 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும் நேரடி ஆட்டோ சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு தொடர்ந்து நீடிக்கிறது.