இதெல்லாம் தேவையில்லாத வழக்கு.. தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தேவையற்ற வழக்காக கருதப்படுகிறது என்று கூறி அபராதம் விதித்துள்ளனர்.
அபராதம் விதிப்பு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அல்லது மக்களுக்கான சிறப்பு திட்டங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அவை நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அதற்கான தீர்வு கண்டறியப்படும். வழக்கின் முடிவில் நீதிமன்றத்தின் படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், சென்னை உய்ரநீதிமன்றத்தில் இதுபோல் முன்னதாக அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பான வழங்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு ஊழியர் ஓய்வூதியம் பெற தகுதியானவர் தான் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தது. அதன்படி தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி முன் விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரை!
Exams Daily Mobile App Download
விசாரணையின் முடிவில், உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் கூட மீண்டும் மேல் முறையீடு செய்வது தேவையற்ற செயல். இதனை தவிர்க்க வேண்டும் என்றும் கூறி, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தமிழக அரசுக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், இந்த தொகை 4 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தின் பதிவு அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்