தமிழக கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!
ஆயுதபூஜை பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மறுநாள் விஜய தசமி கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை நாட்களின் 2 தினங்களில் ஆயுதபூஜை, விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை தொழிற்சாலைகள், அலுவலகங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். தங்களுடைய தொழிலுக்கு உதவும் ஆயுதங்களையும் கருவிகளையும் வைத்து மக்கள் பூஜை செய்வார்கள். அதே போல வீடுகளிலும் மக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து வழிப்பாடு செய்வர். அதனை தொடர்ந்து ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று கல்வி நிறுவனங்களில் வழிபாடு நடைபெறும்.
இப்பண்டிகைகளை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு அக்டோபர் 4ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது. அதாவது அக். 1ம் தேதி சனிக்கிழமை, அக். 2 ஞாயிற்று கிழமை,பண்டிகைக்கு முதல் நாளான அக். 3 திங்கள் கிழமை , அக். 4 ஆயுத பூஜை, அக். 5 விஜயதசமி என தொடர்ந்து 5 நாட்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். அதனால் மக்களின் வசதிக்காக தமிழகத்தில் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்