ஜனவரி 4 கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
ஜனவரி 4 கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது - நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஜனவரி 4 கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது - நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஜனவரி 4 கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 4ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

உள்ளூர் விடுமுறை:

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, பேரட்டி, ஓதனட்டி, மஞ்சுதளா, மல்லிக்கொரை, பெரிய பிக்கட்டி, சின்ன பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த பண்டிகை வருகிற 4ம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

Follow our Twitter Page for More Latest News Updates

அன்றைய தினம் 8 கிராம மக்கள் விரதம் இருந்து பாத யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்திற்கு ஜனவரி 4ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக மற்றொரு விடுமுறை தினம் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், வருகிற ஜனவரி 4ம் தேதி அன்று விடுமுறை தினத்தை ஈடு செய்ய வருகிற ஜனவரி 21ம் தேதி அன்று (சனிக்கிழமை) பணி நாளாக கருதப்படும். அதன்படி மாவட்டத்தில் ஜனவரி 21ம் தேதி அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!