TNUSRB உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு 444 காலிப்பணியிடங்கள் – எழுத்துத் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

0
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு 444 காலிப்பணியிடங்கள் - எழுத்துத் தேர்வு அறிவிப்பு வெளியீடு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு 444 காலிப்பணியிடங்கள் - எழுத்துத் தேர்வு அறிவிப்பு வெளியீடு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு 444 காலிப்பணியிடங்கள் – எழுத்துத் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணிக்கு மொத்தமாக 444 காலியிடங்கள் இருக்கிறது. இந்த பணிக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 25 மற்றும் 26, 2022 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் பணி:

காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணிக்கு மொத்தமாக 444 காலியிடங்கள் இருப்பதால் அந்த காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) பணிக்கு 399 காலிப் பணியிடங்களும், காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணிக்கு 45 காலிப் பணியிடங்களும் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகம் இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரரின் வயது ஜூலை 1, 2022 ன் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர் ரூ.500 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – மோசமான தொடக்கத்திற்கு இதுதான் காரணம்?

எழுத்து தேர்வின் மூலமாக தான் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்து தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மேலும், எழுத்துத் தேர்வு ஜூன் 25 மற்றும் 26, 2022 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதன் பின்பு உடல் திறன் தேர்வு (PET) , உடல் அளவீட்டுத் தேர்வு (PMT) , சகிப்புத்தன்மை தேர்வு (ET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு பிறகு Viva- Voce நடைபெறும். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, Viva-Voce மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு முலமாக பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த அனைத்து தேர்விலும் தேர்வாகுபவர்களுக்கு மாதம் ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!