தமிழக அரசு கல்லூரிகளில் 4000 காலிப்பணியிடங்கள் – இன்று(டிச. 15) முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அதற்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4000 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அதனை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த பணியிடங்கள் தவிர மீதம் உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணவர்கள் நலன் கருதி அரசு கல்லூரிகளில் முறையான கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி இருப்பவர்கள் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக கௌரவ விரிவுரையாளர் பணியில் சேர இன்று ( டிச. 15) முதல் டிச 29 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 க்குள் புதிதாக 300 ஊழியர்கள் நியமனம் – Finance நிறுவனத்தின் உறுதி!
Exams Daily Mobile App Download
மேலும் அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு மாதம் ரூ. 20000 மதிப்பு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.