சென்னையில் இன்று 400 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் – மாநகராட்சி ஏற்பாடு!
தலைநகர் சென்னையில் கொரோனா நோய்த்தடுப்பு பணியாக இன்று 400 கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மே மாதம் முழு ஊரடங்கை பிறப்பித்தார். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் வைரஸ் கட்டுக்கடங்கவில்லை. இதனால் தமிழக அரசு தடுப்பு பணியாக 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது.
செப்.1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் போது தமிழக மருத்துவ பணிகள் கழகம் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், வலியுறுத்தியும் தடுப்பூசிகளை பெற்றது. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் ஒரு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35,000 ஆக இருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 1,573 (கடந்த 24 மணிநேர நிலவரப்படி) ஆக சரிந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் எதிர்பார்த்த அளவு குறைந்துள்ளது. மேலும் தொற்றை முழுமையாக குறைக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு 2 முகாம் என இன்று 400 சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதில் 200 சிறப்பு முகாம்கள் வார்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்காலிக முகாம்களாகவும் செயல்படுகிறது.