தமிழக அரசுத்துறையில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள்? அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஏராளமான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அரசு துறைகளில் மொத்த காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து வரும் ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வந்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. மேலும் வரும் ஜூன் 25, 26ம் தேதி TNUSRB SI தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
கடந்த 2019ம் ஆண்டின் நிலவரப்படி தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரில் 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 லட்சம் பேர் ஆவார்கள். இந்திய அளவில் எடுத்து கொண்டால் 15 கோடி பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தபட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருத்துக்கள் கூறப்பட்டது. கடந்த ஜூன் 1ம் தேதி நிலவரப்படி 60 வயதை பூர்த்தி அடைந்ததை சுமார் 7,000 அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிய வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!
அதனால் இனி வரும் ஆண்டில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 25,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு துறையில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறைகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் விதமாக காலிப்பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும். அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட் குறைப்பினை கைவிட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.