தமிழகத்தில் மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகை – அரசு அறிவிப்பு!
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஆண்டு தோறும் உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
உதவித்தொகை
தமிழகத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவு உதவித்தொகை, அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் உதவித்தொகை பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களது விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. இது பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி விண்ணப்பதாரர் 1.1.2021 ஆம் தேதிக்குள் 58 வயது நிறைந்தவராகவும், அவரது ஆண்டு வருவாய் 72,000 க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் – நீதிமன்றம் உத்தரவு!
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழி மூலமாக பெற்ற வருமான வரி சான்றிதழ், தமிழ்ப்பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள், தற்போது தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி சான்று, தமிழறிஞர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ள விண்ணப்பத்தை படிவத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான படிவம், தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.com/ என்ற இணையத்திலும், நேரடியாகவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவித்தொகையாக 3,500 ரூபாயும், மருத்துவப்படியாக 500 ரூபாயும் திங்கள்தோறும் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்த விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து அவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்வளர்ச்சி துறையின் இயக்குநர்கள் அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவங்களை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை -8 என்ற முகவரிக்கு அனுப்பலாம். இந்த படிவங்களை 31-8-2021 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.