தமிழக அரசு சார்பில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.3000 ஊதியம் – குடிமைத்தேர்வு பயிற்றுநர்களுக்கு அறிவிப்பு!
தமிழகத்தில் IAS, IPS ஆகிய குடிமைப்பணி தேர்வுகளுக்கு அரசு சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பயிற்றுனர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடிமைப்பணி தேர்வு:
இந்தியாவில் ஆண்டுதோறும் IAS, IPS போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குடிமைப் பணிக்கான தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குடிமைப் பணித் தோ்வானது முதல்நிலை, பிரதான மற்றும் நோ்முகத் தோ்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வாகிறவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையை மாற்ற குடிமைப்பணித் தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு அரசு சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு முதுகலை ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் – ஆணை வெளியீடு!
தமிழக இளைஞர்களுக்கு குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதை இந்த மையம் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் உள்ள குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதன்மை தேர்வுக்கான பயிற்சியை பெருகின்றனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் குடிமைப் பணி பயிற்சி மையத்திற்கு நேரடியாக வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்
இந்தியாவின் வறுமையான மாநிலம் எது தெரியுமா? நிதி ஆயோக் அறிக்கை! தமிழகம் 4வது இடம்!
இந்த நிலையில் பயிற்றுனர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. அதனால் தற்போது மணிக்கு 3 ஆயிரம் வரை மதிப்பூதியம் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மதிப்பூதியம் மணிக்கு 3 ஆயிரமும், கல்வித்துறையை சேர்ந்தவர்களுக்கு மணிக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தாண்டு தேர்வு எழுதுவோருக்கு சிறந்த பயிற்சிகளை வழங்க தேவையான பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. தற்போது 104 பேருக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் உணவு, தங்குமிடம் ஆகியன இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.