இந்தியாவின் வறுமையான மாநிலம் எது தெரியுமா? நிதி ஆயோக் அறிக்கை! தமிழகம் 4வது இடம்!
இந்தியாவில் நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமை குறியீடு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி பீகார் மாநிலம் மிகவும் ஏழ்மையான நாடாக முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி ஆயோக் அறிக்கை:
இந்தியாவில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு பல பரிமாண அறிக்கையை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நிதி ஆயோக்கால் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்ட பல பரிமாண ஆய்வு அறிக்கையின்படி பீகார் மாநிலம் இந்தியாவின் முதல் ஏழ்மையான மாநிலமாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அரிசி ரேஷன் கார்டை, சர்க்கரை கார்டாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அதாவது இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் வரிசையில் 51.91% ஏழைகள் உள்ளதால் பீகார் மாநிலம் முதலிடத்திலும், 42.16% பேர் ஏழைகள் உள்ளதால் ஜார்கண்ட் மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதனை தொடர்ந்து 37.79% பேர் ஏழைகள் உள்ளதால் உத்திரபிரதேசம் மாநிலம் மூன்றாவது இடத்திலும், 36.65% பேர் ஏழைகள் உள்ளதால் மத்திய பிரதேசம் மாநிலம் நான்காவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது. மேலும் 32.67% பேர் ஏழைகள் உள்ளதால் மேகாலயா மாநிலம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.5000 வரை சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இந்தியாவை பொறுத்தவரை பீகார் மாநிலம் மிகவும் ஏழ்மையான மாநிலமாக எப்போதுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மிகக்குறைந்த வறுமையை பதிவு செய்த மாநிலங்கள் வரிசையில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. அந்த வகையில் 0.71% பேர் மட்டுமே ஏழைகள் இருப்பதால் கேரளா முதலிடத்திலும், கோவாவில் 3.76% ஏழைகள், சிக்கிமில் 3.82% ஏழைகள் உள்ளனர். அதனை தொடர்ந்து 4.89% ஏழைகள் உள்ளதால் மிகக்குறைந்த வறுமையை பதிவு செய்த மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு 4வது மாநிலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.