“பாரதி கண்ணம்மா” பரீனா குழந்தையின் பெயர் திப்பு சுல்தானா? கணவர் ரகுமான் சொன்ன தகவல்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவரது கணவர் பிரசவ கால அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை பரீனா:
பாரதி கண்ணம்மா சீரியல் பரீனாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு கடைசி வாரம் வரை அவர் சீரியலில் நடித்திருக்கிறார். அதனால் அவருக்கு பல பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்த பின் அவரது கணவர் ரகுமான் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் குழந்தை பிறந்த சந்தோசம் பற்றி பகிர்ந்து இருக்கிறார். மேலும் குழந்தை பிறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் வலி வந்ததாகவும், ஆனால் அது பொய் வலி என டாக்டர் சொல்லி அனுப்பி விடுவார்கள். கடைசியாக அவர் உண்மையாகவே வலிக்கிறது என சொல்ல மருத்துவமனைக்கு சென்றோம்
வெண்பாவை திட்டி தீர்த்த பாரதி, கண்ணம்மாவுடன் ஒன்று சேர்வாரா? சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
அப்போது டாக்டர் உண்மையாகவே பிரசவ வலி என சொன்னார்கள் பின் அவர் வலியில் மிகவும் துடிப்பதை பார்த்து கஷ்டமாக இருந்தது என சொல்லி இருக்கிறார். பிரசவத்தின் போது நான் உடன் இருக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் என்னை உள்ளே வரவிடவில்லை. அவள் மிகவும் கஷ்டப்பட்டாள் பின் நார்மல் டெலிவரியில் குழந்தை பிறந்துள்ளதாக சொன்னதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. பரீனா பிரசவ காலத்தில் வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் பற்றி கவலைப்பட்டார்களா என கேட்டதற்கு அப்படி எல்லாம் இல்லை என சொல்லி இருக்கிறார். ஆனால் அவளது நண்பர்களே அப்படி பேசும் போது அதை நினைத்து தான் கவலைபட்டிருக்காள்.
“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு பதில் இனி இவரா? வைரலாகும் வீடியோ!
பாரதி கண்ணம்மாவில் மற்றும் போட்டோஷூட்களில் வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் பற்றி நீங்க என்ன அட்வைஸ் பண்ணீங்க என கேட்டதற்கு நான் அவருடன் நண்பராக தான் பழகுகிறேன். அதனால் இதை செய்தால் தவறு அப்பறம் உன் இஷ்டம் என சொல்வேன் . நான் போட்டோஷூட்களில் குதிரை மீது உட்காராமல் இருப்பது தான் நான் சொன்னதால் தான் செய்தேன். நான் இல்லாமல் இருந்திருந்தால் அவள் மேலே ஏறி உட்காந்திருப்பாள் என சொல்கிறார். ரகுமான் திப்பு சுல்தான் என பையனுக்கு பெயர் வைக்கலாமா என கிண்டலாக சொல்வேன் அதை கேட்டு அவள் கோவப்படுவாள். 2040ல் கூட ட்ரெண்டா இருக்க வேண்டும் அப்படி பெயர் தான் வைப்பேன் என பரீனா முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்.