மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3000 வரை பென்ஷன் – சூப்பர் திட்டம்!
விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம்தோறும் பென்ஷன் வழங்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் கிசான் மந்தன் யோஜனா:
விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. பிரதான் மந்திரி சம்மன் நிதி அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடம் 6000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 9 தவணையாக விவசாயிகளுக்கு மொத்தம் 18,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 9 தவணைகளை தொடர்ந்து தற்போது 10வது தவணையை மத்திய அரசு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நவ.15 முதல் 1 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – DEO செயல்முறைகள்!
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் தற்போதைய பொருளாதார பிரச்சனைகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒய்வு காலத்தில் விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெறும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும் வகையில் முதலீடு திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனடைய ஆவணங்கள் ஏதும் தேவையில்லை.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – SMS மூலம் மோசடி! கவனம் தேவை!
இந்த திட்டத்தின் கீழ் 18-40 வயதுடைய விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் வரையிலான பென்ஷன் தொகையை அவர்களது 60 வயதில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த தொகையை பெறுவதற்கும் மாதம்தோறும் 55 – 200 ரூபாய் வரை முதலீடு முதலீடு செய்வது கட்டாயமான ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் 18 வயது முதல் மாதம் 200 ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்தால் 60 வயதிற்குப் பின் மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும். 60 வயதிற்கு மேல் உயிரிழந்தால் குறிப்பிட்ட பென்ஷன் தொகையில் 50 சதவீதம் அவருடைய துணைவியருக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழே பயனடைய தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- அடையாள அட்டை
- வயது சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- நில உரிமையை உறுதி செய்யும் பட்டா அல்லது சான்றிதழ்
- வங்கி பாஸ்புக்
- மொபைல் எண்
- பாஸ்போர்டு சைஸ் போட்டோ