தமிழக நெசவாளர்களுக்கு ரூ.3000 கொரோனா நிவாரணம் – அரசிடம் கோரிக்கை!
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு நிவாரணமாக ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவியது. அதன் காரணமாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அரசு, தனியார் நிறுவனங்கள் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்யும் நோக்கில் மாநில அரசு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000யை அனைத்து ரேஷன் அட்டைதரர்களுக்கு வழங்கப்பட்டது.
வெறும் 5 நிமிடத்தில் இ-பான் கார்டு பெறும் எளிய வழிமுறைகள் இதோ!
மேலும் முன்கள பணியாற்றிய காவல் துறையினருக்கு ரூ. 5000 ஊக்கத்தொகை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக ஊடரங்கு அமலில் உள்ள இந்த வேளையில் பல்லாயிரகணக்கான நெசவு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெசவு கூடங்கள் இயங்காததாலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேக்க நிலையில் உள்ளதாலும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதாலும் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் அரசு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை பெற்று அதனை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் பொது மக்களுக்கு தள்ளுபடி விலையில் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் நெசவாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.3000 வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.