3 நாட்கள் அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா தொற்று!
பொள்ளாச்சி அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நோய்த்தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் செப்.,1ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் அனுமதி!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியை அடுத்துள்ள புளியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அரசு விதித்த நெறிமுறைகளின் படி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் 47 மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
IPL திருவிழா 2021: SRH தமிழக வீரர் நடராஜனுக்கு பதில் உம்ரான் மாலிக்! கொரோனா எதிரொலி!
இதில் 5 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூன்று நாட்கள் பள்ளிக்கு விடுமுறை வழங்கி பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.