IPL திருவிழா 2021: SRH தமிழக வீரர் நடராஜனுக்கு பதில் உம்ரான் மாலிக்! கொரோனா எதிரொலி!
ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியில் நடராஜனுக்கு மாற்றாக புதிதாக உம்ரான் மாலிக் எனற வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடராஜனுக்கு பதில் உம்ரான் மாலிக்:
இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ரசிகர்கள் இன்றி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு, சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்ற போதிலும், வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அநேகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கடந்த ஆண்டை போலவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வீரர்களுக்கு சோதனை மேற்கொண்டத்தில் ஐதராபாத் அணியில் அங்கம் வகித்த தமிழக வீரர் யார்க்கர் நடராஜனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரோடு சேர்த்து 6 பேர் தனிமைபடுத்தப்பட்டனர். ஆனாலும் அன்றைய ஐதராபாத் – டெல்லி அணிகளுக்கான மோதல் நடைபெற்றது. அதில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ICC டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் – பாடல் அறிமுகம்!
இந்நிலையில் தொற்றினால் சிகிச்சையில் இருக்கும் நடராஜனுக்கு பதிலாக மாற்று வீரரை எடுக்கும் விதிமுறையின் படி இந்திய வீரர் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் இந்திய வீரரான இவர் விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் போட்டிகளில் ஜம்மு & காஷ்மீர் அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது நடராஜன் குணமாகும் வரையில் உம்ரான் மாலிக் ஐதராபாத் அணியில் அங்கம் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணி நாளை (செப்.25) பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது.