கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் அனுமதி!
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசி:
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸ் செலுத்தி குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு இரண்டாம் டோஸ் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக உள்ளது.
IPL திருவிழா 2021: SRH தமிழக வீரர் நடராஜனுக்கு பதில் உம்ரான் மாலிக்! கொரோனா எதிரொலி!
தற்போது இந்தியாவில் தடுப்பூசிகள் பயன்பட்டால் தினசரி தொற்று எண்ணிக்கை நன்கு குறைந்துள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 84,15,18,026 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
TN TRB தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – வயது வரம்பை உயர்த்த பரிசீலனை!
மேலும் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அவசரகால அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவின் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைக்கும் என்று சுகாதார துறையின் மூத்த அதிகாரிகளும் தகவல் தெரிவித்துள்ளனர்.