TN MRB தமிழக அரசு மருத்துவமனையில் 29 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.1,15,700 வரை ஊதியம்!
தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 29 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வரும் நிலையில் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகளும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். மேலும் ஒப்பந்த அடிப்படையிலும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 23ம் தேதி வெளியாகும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – அறிமுகமான சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!
அதன் தொடர்ச்சியாக பிற அரசுத் துறை பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 29 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வேதியியல் அல்லது உயிர் வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது பால்வளத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வேதியியல் அல்லது உணவு தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 01.07.2022 தேதி நிலவரப்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்களுக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை இளநிலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். பெண்கள், விதவை பெண்கள் போன்றோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். மேலும் ஆன்லைன் வாயிலாக ஏப்ரல் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.