தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கு 25 லட்சம் நிவாரணம் – கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி நோய் தோற்று பரவலின் காரணமாக உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரேஷன் நிவாரணம்:
தமிழகத்தில் அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்கும் வண்ணம் 39 மாவட்டங்களில் மொத்தம் 34,773 ரேஷன் கடைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. இதில் 243 கிடங்குகளும், 309 மண்ணெண்ணெய் பங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 2.18 கோடி ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 6.90 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா அதிகமாக இருந்த ஊரடங்கு காலகட்டத்தில் கூட மக்களுக்காக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, ரேஷன் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
அரசு வழங்கும் ரூ.7,000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அவ்வாறு பணியாற்றிய ரேஷன் ஊழியர்களில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததோடு சிலர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
இதற்கு உயிரிழந்த ரேஷன் ஊழியர் பணியில் ஈடுபட்ட சான்று, இறப்பு சான்று, கொரோனா தொற்றால் இறந்ததற்கான மருத்துவ சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.