அரசு வழங்கும் ரூ.7,000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
உதவித்தொகை:
தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளை செய்து வருகிறது. அனைவரும் கல்வி பெற வேண்டும் எனபதை மையமாக கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடை, புத்தக பை மற்றும் உதவித்தொகை என மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயலில் உள்ளது.
DC vs RR Live Score – பெவிலியன் திரும்பிய ஹெட்மயர்! டெல்லி கேபிட்டல்ஸ் 121/5
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் அரசு அதன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Best TNPSC Coaching Center – Join Now
ஆறு முதல் 10ம் வகுப்பு வரை 3,000 ரூபாயும், 9 – 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ படிப்புக்கு, 4,000 ரூபாய், இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு 6,000 ரூபாயும், முதுகலை, பி.இ., எம்.பி.பி.எஸ்., படிப்போருக்கு 7,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது