இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் 23 லட்சம் பேர் வேலையிழப்பு – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதனால் இளைஞர்கள் வேலைகளை இழந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு சில தகவல் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் வேகமாக பரவி வந்தது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முதலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளிவர தடை விதிக்கப்பட்டது. அதனால் சாதாரண மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்தனர். அத்துடன் பல இளைஞர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் & அகவிலைப்படி உயர்வு – வெளியான சூப்பர் அறிவிப்பு!
தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. அதனால் வேலையில்லா இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த பட்டியலில் உற்பத்தி, கட்டுமானம், சுகாதாரம், கல்வி, வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட 9 துறைகளில் வேலையிழந்தவர்களின் தரவுகள் இடம்பெற்றுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு – கோரிக்கை முன்வைப்பு!
இது தொடர்பான புள்ளி விவரங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா முதல் முழு ஊரடங்கின் போது அதாவது 3 மாதத்தில் 23 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளார்கள். இதில் 16 லட்சம் பேர் ஆண்களும் 7 லட்சம் பெண்களும் உள்ளார்கள். அத்துடன் முதல் முழு ஊரடங்கிற்கு முன்பு 2.17 கோடி ஆண் ஊழியர்கள் இருந்தனர். ஆனால் ஊரடங்குக்கு பிறகு 2.01 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல் முதல் முழு ஊரடங்கிற்கு முன்பு 90 லட்ச பெண் ஊழியர்கள் இருந்த நிலையில் 83.3 லட்ச பெண் ஊழியர்களாக குறைந்துள்ளது.