தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு – மத்திய அரசு பாராட்டு!

0
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு - மத்திய அரசு பாராட்டு!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு - மத்திய அரசு பாராட்டு!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு – மத்திய அரசு பாராட்டு!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வரவேற்கத்தக்கது என மத்திய உணவுத்துறைச் செயலாளர் சுதான்ஷூ பாண்டே பாராட்டியுள்ளார். உணவு தானியங்களுக்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

தமிழகத்தில் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் திமுக தலைமையிலான அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமையகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோக திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – நேர்காணல் ஒத்திவைப்பு!

இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும் 200 குடும்பங்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணம் வழங்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நீலகிரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய மத்திய உணவு வழங்கல் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே இந்தியாவில் பொது விநியோக திட்டத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பொங்கல் பண்டிகைக்காக அரசு மக்களுக்கு 21 பொருட்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது.

Post Office இல் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6.94 லட்சம் ரிட்டன்ஸ் – தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்!

மேலும் மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் உணவுக்கான மானியத் தொகையை தமிழகத்துக்கு வழங்குகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது வழங்கப்பட்ட உணவு தானியங்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ. 26 ஆயிரம் கோடி ரூபாய் மானியத் தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் உணவு தானியங்களை சேமிக்க போதுமான வசதிகள் உள்ளன. தொலைவான பகுதிகளிலும் சேமிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!