2024 தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஏப். மாதம் விண்ணப்பப் பதிவு!

0
2024 தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - ஏப். மாதம் விண்ணப்பப் பதிவு!

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆர் டி இ திட்டம்:

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள ஆரம்ப வகுப்புகளில் 25 சதவீத எண்ணிக்கையிலான இடங்களை ஆர் டி இ பிரிவின்கீழ் ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயனடைய முடியும். ஒரு பள்ளியின் ஆரம்ப நிலை வகுப்பு எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் இத்திட்டத்தில் இணைந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் இத்திட்டத்தின் மூலமாக படிக்க இயலும். இத்திட்டம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை தமிழகத்தில் மொத்தம் 4.60 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

ரயில் பயணிகளுக்கு அடிக்கடி ஏற்படும் சிக்கல் – நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

இவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பலனடைய பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மாணவரின் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் அவசியம். 2024 ஆம் ஆண்டுக்கான RTE மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!