சென்னை மாநகராட்சிக்கான வரும் நிதியாண்டின் பட்ஜெட்டை இன்று மேயர் தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
சென்னை பட்ஜெட்:
சென்னை மாநகராட்சி மேயர் 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் காலை 10 மணி தொடங்கி தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பிடத் தகுந்த வகையில் 2024 – 25ஆம் தேதி ஆண்டில் 255 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தலா 4 சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு ரூபாய் 7.64 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வரும் புதிய கல்வி ஆண்டில் மொத்தம் 419 சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயின்று வரும் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா இரண்டு செட் வீதம் பள்ளி சீருடைகள் ரூபாய் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
TNHRCE-ல் Assistant Teacher காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விரையுங்கள்!
இதே போல் சென்னையில் 28 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 13 நடுநிலைப் பள்ளிகளில் நாலு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 24,700 பேரை சென்னை சுற்றியுள்ள கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களுக்கு ரூபாய் 47.25 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும். சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டுவதுடன், பழுதுகள் நீக்கி மேம்பாட்டு பணிகள் ரூபாய் மூன்று கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார்.