தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் இத்தகைய அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அவ்வாறு திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து பொதுமக்களுக்கு நலன் தரும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் அவர்கள் தமிழகத்தை சிறப்பித்து உரையாற்றியுள்ளார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்!
இந்நிலையில் தமிழக ஆளுநரின் உரைக்கு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். அப்போது கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவர்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டோருக்கு முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!
இது குறித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூறுகையில், தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது எமது சங்கத்தின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளனர். ஆனால் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 40% ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் உதவித்தொகையாக ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த மாநிலங்களில் வழங்குவதை போல் தமிழகத்திலும் ரூ.3000 வழங்க வேண்டும் என்பதே எங்களது நீண்ட நாள் கோரிக்கையாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.