Paytm நிறுவனத்தில் புதிதாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அதிகாரபூர்வ அறிக்கை!
Paytm நிறுவனம் ஆரம்ப பொது வழங்கலுக்கு முன்னதாக புதிதாக 20,000 பணியாளர்களை மாதம் ரூ.35,000 ஊதியத்தில் பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Paytm வேலைவாய்ப்பு:
கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் பரவி வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் அனைத்து தொழில் துறைகளும் மூடப்பட்டது. அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊரடங்கு காரணத்தினால் பல தொழில்களும் முடங்கியுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு மற்றும் பணியில் இருந்து பணியாளர்கள் நீக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றது.
100 நாள் வேலைத்திட்ட நாட்களை அதிகரிக்க திட்டம் இல்லை – மத்திய இணையமைச்சர் பதில்!
இந்நிலையில், Paytm நிறுவனம் தங்களது ஆரம்ப பொது வழங்கலுக்கு (ஐபிஓ) முன்னால் 20,000 கள விற்பனை நிர்வாகி பணிக்காக ஊழியர்களை நியமிக்க உள்ளதாக தனது அதிகாரபூர்வ அறிக்கையில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் மாதம் ரூ.35,000 அளவிற்கு ஊதியம் பெரும் வகையில் நியமிக்கப்படுவார்கள். இதனால் நிறுவனத்தின் QR குறியீடுகள், பிஓஎஸ் இயந்திரங்கள், பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் மற்றும் UPI மற்றும் பிற தயாரிப்புகள் உள்ளிட்ட பேடிஎம்மின் முழு நிறுவனத்தையும் மேம்படுத்த முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
Paytm நிறுவனம் இந்த பணிகளுக்காக இளங்கலை பட்டதாரிகளை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து Paytm நிறுவனத்தின் ஐபிஓ அக்டோபர் மாதத்திற்குள் ரூ.16,600 கோடியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மே மாத நிலவரப்படி, யுபிஐ பரிவர்த்தனைகளில் Paytm வர்த்தகத்தில் சுமார் 11% வணிக பங்கை கொண்டிருந்தது. அதே நேரத்தில் Phone-Pe நிறுவனம் சுமார் 45% மும், Google Pay நிறுவனம் 35% பங்குகளுடன் NPCI ஐ கொண்டிருந்தது. இறுதியாக இந்த மாத நிலவரப்படி, 16 ஆயிரம் கோடி மதிப்புள்ள Paytm நிறுவனம் நுகர்வோர் மற்றும் வணிகர்களைப் பெறுவதற்கு ரூ.4,300 கோடி ஐபிஓ வருமானத்தைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nice
I need a job