தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் 20% குறைப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், அரசின் இந்த முடிவை ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்கிறோம் எனவும், பாடத்திட்டங்களை 20 சதவீதம் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வரும் இந்த நேரத்தில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டார். விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும் முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை ஐஐடி ஆன்லைன் Data Science பிரிவு தொடக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதனை தொடர்ந்து தமிழகத்தின் தளர்வுகளுன் கூடிய ஊரடங்கை முதல்வர் ஆகஸ்ட் 23ம் தேதி வரை நீட்டித்தார். அப்போது முதல்வர் தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கினார். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் அரசின் இந்த முடிவை ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் அடுத்த கட்டமாக தொடக்கப் பள்ளிகளையும் திறக்க கோரி பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார். பள்ளிகள் கொரோனா பரவலால் தாமதமாக திறக்கப்பட இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டங்களை 20 சதவீதம் குறைக்க கோரியும் பள்ளிக் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.