15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு கடிதம்!

0
15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு கடிதம்!
15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு கடிதம்!
15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு கடிதம்!

இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. மேலும் பல்வேறு நோய் தடுப்பு பணிகளையும் மேற்கொண்டது. மேலும் தடுப்பு பணியின் ஒருபகுதியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின்இரண்டு டோஸ் 18 வயது மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது.

ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

குழந்தைகளுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு செலுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது. அதன் படி கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் 15 வயதுக்குட்பட்ட 4.66 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை செலுத்திய 28 நாட்களில் இரண்டாம் தவணை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3 முதல் 8 – 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மட்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

அதனால் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஜனவரி 3 ஆம் தேதி முதல் தவணை செலுத்தியவர்கள் ஜனவரி 31ஆம் தேதி இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள். அதனால் அரசின் கோவின் இணையதளத்தில் உள்ள தரவுகளை ஆராய்ந்து இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!