தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – பட்டியல் தயாரிக்க உத்தரவு!

0
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு - பட்டியல் தயாரிக்க உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு - பட்டியல் தயாரிக்க உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – பட்டியல் தயாரிக்க உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாரத்தில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. அதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியதை தொடர்ந்து 3ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நவ.19ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில முதல்வர் உத்தரவு!

2ம் தவணை தடுப்பூசியானது 35 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வாரம் தோறும் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு பதில் வாரத்தில் 2 முறை முகாமை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் பட்டியலை தயார் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களில் சிறப்பு முகாம்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரையும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும் என கூறப்பாகியுள்ளது.

தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – டிச.20 நேரடி தேர்வுகள் தொடக்கம்!

அதேபோல் திங்கள் தவிர மற்ற நாட்களில் அரசு மருத்துவ நிலையங்களில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வழங்க, இன்று தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!