மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத நிலுவை அகவிலைப்படி (DA) – முழு விவரங்கள்!

0
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத நிலுவை அகவிலைப்படி (DA) - முழு விவரங்கள்!
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத நிலுவை அகவிலைப்படி (DA) - முழு விவரங்கள்!
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத நிலுவை அகவிலைப்படி (DA) – முழு விவரங்கள்!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது சமீபத்தில் 31% உயர்த்தி வழங்கப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து விரைவில் மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி நிலுவை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஜனவரி முதல் DA மற்றும் DR உயர்வானது கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தவணைகளுக்குமான DA உயர்வு தொகை ஜூலை 1ம் தேதி முதல் 28% ஆக அமலுக்கு வந்தது. அதன் பிறகு, 2021 ஜூலை 1 முதலான தவணைக்கு கூடுதலாக 3% வழங்கப்பட்டு மொத்தம் 31% அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழங்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் அமலுக்கு வந்துவிட்ட நிலையிலும், இன்னும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களின் DA நிலுவை விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் முறையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் – தேமுதிக தலைவர் கோரிக்கை!

மேலும், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னதாக டிசம்பர் மாதத்தில் மத்திய ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ள DA, 18 மாதங்களாக நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத்தொகை ஒரே முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் கவுன்சில் (ஜேசிஎம்) செயலர் கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழக வருவாய்த் துறையில் 108 புதிய பணியிடங்கள் உருவாக்கம் – அரசு அதிரடி!

நிதி அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் செலவினத் துறை அதிகாரிகளுடன் கூட்டு ஆலோசனை கூட்டம் நடைபெறும். டிஏ நிலுவைத் தொகையை ஒருமுறை செலுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜேசிஎம் செயலாளர், முதல் நிலை ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37 ஆயிரம் வரை இருக்கும் என்றும், அதே சமயம் 13ம் நிலை ஊழியர்களுக்கு டிஏ நிலுவையாக ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!