தமிழகத்தில் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றோர் கவனத்திற்கு – 17,719 சிறப்பு பேருந்துகள்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற 6 லட்சம் பேர் திரும்ப வசதியாக 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு பேருந்து:
தமிழகத்தில் விடுமுறை தினங்களில் வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர். அதனால் மற்ற நாட்களை விட சற்று பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மேலும் பண்டிகை தினங்களிலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்வர். அந்த வகையில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாவே இருந்தது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.9ம் தேதி நுழைவுச்சீட்டு வெளியீடு!
இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து அவர்கள் சென்னைக்கு திரும்ப முடிவு எடுத்து திரும்பி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக அரசு 17,719 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று 643 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு மொத்தமாக 730 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!
ஞாயிற்றுக் கிழமையான நாளை சென்னைக்கு 2100 வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1729 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை (07.11.2021) மற்றும் திங்கட்கிழமை (07.11.2021) இந்த இரு நாட்களும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் காரணத்தால் பேருந்து புறப்படும் நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் பண்டிகை தினத்தை முன்னிட்டு கடந்த 4 நாட்களில் மட்டும் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.86 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.