தமிழகத்தில் 16 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சம் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
விவசாய கடன் ரத்து
சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று (ஜூன் 21) துவங்கிய இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், விவசாயிகள் மீதான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி தொலைக்காட்சி!
அதனால் விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய திமுக அமைச்சர்கள் அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தும், சிலர் அரசுக்கு கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்ததற்கு முதல்வரின் தீவிர நடவடிக்கைகளே காரணம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இவரை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகளுக்கு எவ்வித தடையுமில்லை. அந்த வகையில் இதுவரை 16 லட்சம் விவசாயிகளின், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
Work