அன்பில் மகேஷ் முதல் சிவி கணேசன் வரை – ஸ்டாலின் அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்!!
தமிழகத்தில் நாளை முதல் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில் அமைச்சரவையில் 15 புதுமுகங்கள் இம்முறை இடம் பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சரவை:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் தமிழக கவர்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க அக்கட்சியின் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். இதன் அடிப்படியில், நாளை திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
அவரது தலைமையில் அமைய உள்ள அமைச்சரவை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், 15 புதுமுகங்கள் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். அவர்களின் பட்டியல் இதோ,
- அர. சக்கரபாணி – உணவு மற்றும் உணவு பொருள் மற்றும் பொது விநியோகத்துறை
- பி.மூர்த்தி – வணிக வரி மற்றும் வரிகள் மற்றும் பதிவுத்துறை
- எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- பி.கே.சேகர்பாபு – இந்து சமய நலத்துறை
- பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை
- எஸ்.எம்.நாசர் – பல்வளத்துறை
தமிழக அரசு பணிகளில் 100% தமிழர்களுக்கே – ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை!!
- செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மை நலத்துறை
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை
- வி.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாடு வளர்ச்சித்துறை
- சி.வி.கணேசன் – தொழிலாளர் மற்றும் ஸ்கில் மேம்பாடு துறை
- மனோ தங்கராஜ் – தொழில்நுட்பத் துறை
- மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
- கயல்விழி – ஆதிதிராவிட நலத்துறை
- ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் நெசவுத் துறை
- ம.சுப்ரமணியன் – சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்