தமிழகத்தில் இன்று முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு;
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வரும் அக்.27 ஆம் தேதியும், தேவர் ஜெயந்தி அக்.30 ஆம் தேதியும் நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்பூஜையை முன்னிட்டு பூ, பழங்களின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!!
இந்நிலையில், சட்டஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி மற்றும் தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இன்று முதல் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், மாவட்டத்திற்குள் எந்தவித கூட்டம் நடத்தவும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.