நாடு முழுவதும் 1,300 வங்கி ஊழியர்கள் கொரோனாவால் பலி – அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் 1300 வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் இந்திய வங்கிகள் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வங்கி ஊழியர்கள்:
கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. அனைத்து வயதினரும் இந்நோயால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனை தடுக்க அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மாநிலங்கள் தோறும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகிறது. காய்கறி, பால், மளிகை மற்றும் மருந்து பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் வங்கிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இந்திய வங்கிகள் அமைப்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – முதல்வரிடம் பரிசீலனை!!
அதில் இதுவரை நாடு முழுவதும் 1,300 வங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர்கள் அனைத்து ஆபத்துக்களுடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், ஒட்டுமொத்த கொரோனா இறப்புகளுடன் ஒப்பிடுகையில் வங்கி ஊழியர்களின் இறப்பு 0.10 சதவீதமாகும். இது சராசரியை விட அதிகம் என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
எனவே ஊழியர்களை காக்க அதிக வங்கி கிளைகள் கொண்ட நகரங்களில் ஏதேனும் ஒரு கிளையை மட்டும் திறக்க அனுமதிக்க வேண்டும். சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டும் நேரில் வந்தும், மற்றவர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய வங்கி ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வங்கி ஊழியர்களின் கொரோனா பாதிப்பு விவரங்களை வாராந்திர சுகாதார அறிக்கையில் வெளியிட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.