தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் – ஆசிரியர் சங்க தலைவர் கோரிக்கை!!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் - ஆசிரியர் சங்க தலைவர் கோரிக்கை!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் - ஆசிரியர் சங்க தலைவர் கோரிக்கை!!தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் - ஆசிரியர் சங்க தலைவர் கோரிக்கை!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் – ஆசிரியர் சங்க தலைவர் கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் 12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொற்றின் தாக்கம் குறைந்து வந்த காரணத்தால் மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இதனால் ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கும், பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மார்ச் 31 வரை பள்ளிக்கு வருவது கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

இரண்டாம் அலை:

பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 நாட்களாக திடீரென்று கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. அதிலும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிக அளவில் தொற்று பரவி வந்தது. இதனால் கடந்த 22ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

ஆசிரியர் சங்க கோரிக்கை:

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பி வருகின்றனர். இதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், பொதுத்தேர்வுகளை ஆன்லைன் முறையில் அல்லது பள்ளிகள் அளவில் நடத்துவதற்கும் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!